மனிதத்தை உணருங்கள்!!!

இறைவின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாகட்டுமாக!!! எந்த தவறும் செய்யாதவர்கள் தண்டிக்கப்படுவதும், அதற்காக அவர்கள் ஒதுக்கப்படுவதும் காலங்காலமாக சிலரால் சிலர் அனுபவித்து வருவது எங்கெங்கும் நம்மால் காண முடிகிறது. நாம் இந்தியாவில் வாழ்வில் இந்தியாவையே எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்வோம். ஒருவர் எந்த வித குற்றமே செய்யாமல் அவர் தண்டனையா?? அனுபவிக்கிறார் என்றால் ஒன்று அவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவராகவோ அல்லது தலித் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். ஏனென்றால் இவர்களை நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், குற்றப்படுத்தலாம், அவர்கள் விரும்பியதை உண்பதை தடுக்கலாம் அதற்காக மிருகத்தை விட மோசமாக சித்திரவதை செய்யலாம் என்ற கோட்பாட்டை, வெறியை ஆதிக்க சக்தியினர் என்றென்றும் தங்கள் கொள்கையாக வைத்துள்ளனர். அதை புற்றுநோய் போல் எங்கெங்கும் பரப்பி வருகின்றனர். இவர்களின் கோட்பாட்டை இவர்களோடு நில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக சாமானிய மக்களிடமும், மற்றவர்கள் அறியாத அளவில் வலுக்கட்டாயமாக திணித்து உள்ளதும், அதனை சிந்திக்காமல் அதை அவர்களும் கண்மூடித்தனமாக பின்பற்றுவதும் தான் மிகவும் வேதனைக...