Posts

Showing posts from July, 2017

இது ஒரு விழிப்புணர்வு பதிவு - மசூர் தால் (பருப்பு)

Image
பொதுவாவே பள்ளி படிக்கும் காலங்களில் பள்ளியில் தினமும் சாம்பார் சாதம் தான் போடுவாங்க சத்துணவு என்ற பேரில்... சாம்பாருக்காக பயன்படுத்தப்படும் பருப்பு ஒருவித சிவப்பு கலர்ல இருக்கும்.. ரொம்ப ஈசியா வெந்துடும்.. பேர் மசூர் தால்னு சொல்வாங்க.. செம்ம வாடையா (துர்நாற்றமாக) இருக்கும். அந்த வாடை சிலருக்கு பிடிக்கும் , பலருக்கு பிடிக்காது. ஆனாலும் பள்ளிக்கூட சாப்பாட்டையே சாப்பிடும் நிலை உள்ளவர்களுக்கு அதெல்லாம் பெரிய வாடையா இருக்காது.. இன்னும் சொல்லப் போனா, சத்துணவு என்று பள்ளிக் கூடங்களில் போடப்படும் பெரும்பாலான உணவு சத்தை விட நோயையே அதிகம் தருகிறது.. காரணம் புழு பூச்சிகள் நிறைந்த அரிசி , அத சரியா கழுவக் கூட சோம்பேறித்தனம் படும் சத்துணவு பொறுப்பாளிகள். அந்த சோற வடிச்சு ஒரு சாக்குல கொட்டுவாங்க பாருங்க.. அந்த சாக்கு சுத்தம் செய்து கழுவாம கூட அது மேலையும் , இது மேலையும் சுத்தமற்ற பல இடத்தில் போட்டு காய விடுவாங்க..  இது அனைத்து பள்ளிகளிலும் அப்படி நடக்கிறதா என்று தெரியாவிட்டாலும் சில பள்ளிகளில் நடந்தது உறுதி, கண்ணால் கண்டவர்களில் நானும் ஒருவள். அதாவது நான் படித