Posts

Showing posts with the label சர்வேதச புத்தக கண்காட்சி

37-வது ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியும், எனது அனுபவமும்

Image
இக்காலங்களில் புத்தகத்தின் மீதான ஈர்ப்பு குறைந்துக் கொண்டே வந்தாலும், ஆங்காங்கே வருடந்தோறும் நடக்கும் புத்தக கண்காட்சி புத்தக புழுக்களுக்கு விருந்தாக அமைகிறது என்றால் மிகையாது. அதே போல் இந்த வருடமும் அமீரகத்தில், 37- வது ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி அக்டோபர் 31 முதல் நவம்பர் 10 வரை ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் நடந்து வருகிறது. கடந்த வெள்ளி அன்று சென்று வர வாய்ப்புக் கிடைத்தாலும், செல்ல வேண்டும் என்ற நோக்கம் கடந்த வருடத்தில் கண்ட ஏமாற்றத்தை நிரப்ப இந்த வருடம் தமிழுக்கென்று பிரத்யோக தமிழ் கடைகள் அமைக்கவிருப்பதை அறிந்த பின் ஆர்வம் இரட்டிப்பாகானது. புத்தகம் என்றாலே தூக்க மருந்து என்றாகி போனாலும், நம் மொழிக்கான அங்கீகாரம் நம் வசிக்கும் அயல் நாட்டில் கிடைக்கிறது என்றால் சுண்டி இழுக்கத்தானே செய்யும். Hall No:7, ZB4 -ல் பபாசி மூலமாக ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ள தமிழுக்கான கடையை நோக்கி விரைந்ததும் அகண்ட கண்கள் சுருங்கவில்லை, எத்தனை எத்தனை புத்தங்கள், எத்தனை எத்தனை எழுத்தாளர்களின் படைப்புகள், வித்தியாசமான தலைப்புகளில் பல புத்தகங்கள் இருந்தாலும் நமக்கு அறியப்பட்ட சில எ...

ஷார்ஜா சர்வேதச புத்தக கண்காட்சியும், நானும்!!!

Image
உலகிலேயே சர்வேதச புத்தக கண்காட்சியில் மூன்றாம் இடத்தை பிடித்திருப்பது தான் ஷார்ஜா, எக்ஸ்போ சென்டரில் நடக்கும் புத்தக கண்காட்சி. இம்மாதம் 1  முதல் 11 வரை நடக்கும் இப்புத்தக கண்காட்சியில் உலக அளவில் பல தரப்பட்ட பதிப்பகங்களின் புத்தகங்களும், பல மொழிகளின் புத்தகங்களும் ஒன்றே சங்கமிக்கும் ஒரு அரிய வாய்ப்பு. ஆனால் தமிழுக்கு தான் இல்லை இப்படி ஒரு வாய்ப்பு. ஆம் கடந்த 3- ஆம் தேதி பலதரப்பட்ட திட்டங்களோடு சென்ற எங்களுக்கு கிடைத்தது பல ஏமாற்றங்கள், இருப்பினும் புது வித அனுபவமாக இருந்தது. தி.மு.க செயல்தலைவர் திரு.ஸ்டாலின் மற்றும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ரா) அவர்களின் நிகழ்ச்சி, சில தோழிகளின் சந்திப்பு மற்றும் அதனூடே புத்தகங்களை பார்வையிடவும் திட்டமிட்டு சென்றிருந்தோம்.. நான்கு மணிக்கு திறக்கப்பட்ட வளாகத்தில், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் திரு.ஸ்டாலின் அவர்களின் உரையை கேட்பதற்காக செலவழித்தோம். உனக்கும், அரசியலுக்கும் என்ன சம்மந்தம்? நீ ஏன் அங்க போன? என்று கேட்கும் உங்க மைன்ட் வாய்ஸ் இங்க வர செவியை கிழிக்கும் அளவில் கேட்கிறது. உண்மை தான், நம்மூர் தலைவர இவ்வளவு ஈசியா பாக்க கூடிய...