Posts

Showing posts from 2015

செத்தால் எரித்து விடுங்கள்!!!

Image
பெண்ணாக பிறக்கும் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் அனுபவிக்கும் ரணங்கள் எண்ணற்றவை. இயற்கையாகவே உடலாலும் மனதாலும் பலவீனமானவள் பெண். அதனால் தான் “பெண்ணைக் கண்டால் பேயும் இறங்கும்” என்ற பழமொழியை ஒரு பெண்ணை நோக்கி கூறுகிறார்களோ என்னவோ. இயற்கையாக ஒரு பெண் தன் உடலில் அனுபவிக்கும் வலிகளும் வேதனைகளும் தடுக்க இயலாது எனினினும், மற்றவர்களால் அவள் படும் இன்னல்களை தடுக்க முடியும். அவளுடைய முயற்சி அதில் சிறிதளவு உள்ளது எனினும் பெரு முயற்சியும் பொறுப்பும் அவளை சுற்றி வாழும் மனிதர்கள் கையிலேயே உள்ளது என்றால் மிகையாகாது. ஆம்.. நம்மால் எந்த ஒரு மனிதனுக்கும் எந்த ஒரு கேடும் வந்துவிடக் கூடாது என்று ஒவ்வொரு மனிதனும் எண்ணினால் ஒவ்வொருவரின் வாழ்வும் சுகமே. அதுவும் பெண்களை ஒரு ஆணுக்கு தேவைப்படும் சுகப்பொருளாக எண்ணுவதை விட்டு இரத்தமும் சதையும் கொண்ட அவளையும் ஒரு உயிராக ஒவ்வொரு ஆணும் என்று கருதுகிறானோ அன்றே இவ்வுலகை பூவுலகம் எனலாம். ஒரு பெண்ணாக மற்றொரு பெண்ணிற்கு ஏற்ப்படும் வலிகளையும் வேதனைகளையும் நான் உணரும் போது அந்த இடத்தில் என்னை வைத்து சித்தரித்தே பல இடங்களில் அழுது, தேம்பி இருக்கின்றேன். அதுவும் அவ

மோனிகா என்ற ரஹீமாவின் திருமணமும், மனிதர்கள் போர்வையில் மிருகங்களின் வசை பாடும் ......

Image
அளவற்ற   அருளாளனும் , நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின்   திருபெயரால் துவங்குகிறேன்... அஸ்ஸலாமு அழைக்கும்     வரஹ்மாதுல்லாஹி வ   பரக்காத்தஹு... எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ , அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள் ;   பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்.     (அல் குர்-ஆன்   24:4 ) மோனிகா என்கின்ற ரஹீமா   இஸ்லாத்திற்கு மதம் மாறி கிட்டத்தட்ட   ஆறு , ஏழு   மாதங்கள் மேலாகிவிட்ட து. அவர்   “ ‘ பணத்திற்காகவோ காதலுக்காகவோ நான் மதம் மாறவில்லை. இஸ்லாம் மதத்தின் கொள்கைகள் எனக்கு பிடித்ததால் நான் மதம் மாறினேன் என்று எதற்காக மாறினார் என்ற விளக்கத்தை நேரடியாக பதிவு செய்த பிறகும் பணத்திற்காக மாறியுள்ளார் , ஷேக்கை   திருமணம் முடிக்க இந்த பிளான் , பைத்தியம் பிடித்து விட்டது அது , இது என்று அவரை தூற்றி எடுத்த மக்கள் இன்று மேலும் அவர் திருமணத்திலும் பல கேடு கெட்ட வார்த்தைகளை தூவி வாழ்த்து மழை பொழிகின்றனர். ஒருவரின் பொது வார்த்தை பிரோயக