Posts

Showing posts from November, 2017

கறுப்பு பணம் – கறுப்பு தினம் – நவம்பர் 8

Image
ஆம் நவம்பர் 8, மறக்கமுடியுமா.. பல கோடி மக்களின் வயிற்றில் அடித்த தினம், அடிமட்ட மக்களை ஆட்டிப்படைத்த தினம். இதே நாள், கடந்த வருடம் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த தினம். ஆரோக்கியமாக வாழ்கிறோம் என்று இருமாப்பு கொண்டோரின் இதயத்தையும் ஆட்டுவித்த தினம். கறுப்பு பணத்தை ஒழிக்கிறேன், புதிய இந்தியாவை பிறப்பிக்கிறேன் என்று எவ்வித முன்னேற்ப்பாடும் இல்லாமல் பண முதலைகளின், பணத்தை காக்க இருட்டடிப்பு செய்த தினம். சாமானிய மக்களின் வாழ்வை சாகச வாழ்வாக மாற்றிய தினம். மறக்க முடியுமா?? தன் உழைப்பில் உருவான சேமிப்பைக் கூட அடுத்தவர் கட்டளையின் படி தான் செலவழிக்க முடியும் என்று இக்கட்டான சூழலுக்கு தள்ளிய தினம். “எங்களிடம் தாருங்கள், உங்கள் பணத்தை பாதுகாக்கிறோம். பாதுகாக்க கூலியை நீங்கள் தர வேண்டாம், வட்டியாக நாங்கள் தருகிறோம் என்று கூவி அழைத்து, சேமிப்பை கணக்கை துவங்க வைத்த வங்கிகளெல்லாம், “ 2000 தான் தர முடியும், நீ எம்புட்டு வச்சு இருந்தா என்ன, நாளைக்கு வா என்று நம் பணத்தை வைத்தே நம் சுயமரியாதையை ஏளனம் செய்த தினம்”. வேலைக்கு செல்ல இயலாமல், அன்றாடம் சம்பாதிக்கும் தினக் கூ

ஷார்ஜா சர்வேதச புத்தக கண்காட்சியும், நானும்!!!

Image
உலகிலேயே சர்வேதச புத்தக கண்காட்சியில் மூன்றாம் இடத்தை பிடித்திருப்பது தான் ஷார்ஜா, எக்ஸ்போ சென்டரில் நடக்கும் புத்தக கண்காட்சி. இம்மாதம் 1  முதல் 11 வரை நடக்கும் இப்புத்தக கண்காட்சியில் உலக அளவில் பல தரப்பட்ட பதிப்பகங்களின் புத்தகங்களும், பல மொழிகளின் புத்தகங்களும் ஒன்றே சங்கமிக்கும் ஒரு அரிய வாய்ப்பு. ஆனால் தமிழுக்கு தான் இல்லை இப்படி ஒரு வாய்ப்பு. ஆம் கடந்த 3- ஆம் தேதி பலதரப்பட்ட திட்டங்களோடு சென்ற எங்களுக்கு கிடைத்தது பல ஏமாற்றங்கள், இருப்பினும் புது வித அனுபவமாக இருந்தது. தி.மு.க செயல்தலைவர் திரு.ஸ்டாலின் மற்றும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ரா) அவர்களின் நிகழ்ச்சி, சில தோழிகளின் சந்திப்பு மற்றும் அதனூடே புத்தகங்களை பார்வையிடவும் திட்டமிட்டு சென்றிருந்தோம்.. நான்கு மணிக்கு திறக்கப்பட்ட வளாகத்தில், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் திரு.ஸ்டாலின் அவர்களின் உரையை கேட்பதற்காக செலவழித்தோம். உனக்கும், அரசியலுக்கும் என்ன சம்மந்தம்? நீ ஏன் அங்க போன? என்று கேட்கும் உங்க மைன்ட் வாய்ஸ் இங்க வர செவியை கிழிக்கும் அளவில் கேட்கிறது. உண்மை தான், நம்மூர் தலைவர இவ்வளவு ஈசியா பாக்க கூடிய வாய