உலக ஹிஜாப் தினம் - பிப்ரவரி 1
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)...
ஹிஜாப் அணிவது குறித்த தவறான
புரிதல்களை களைவதற்காக பிப்ரவரி 1-ஆம் தேதி ஹிஜாப் தினமாக
கடைப்பிடிக்கப்படுகிறது. ஹிஜாப் அணிவதை ஊக்குவிப்பதற்காக அமெரிக்காவின் நியூயார்
நகரில் 2 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முறையாக ஹிஜாப் தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
பங்களாதேசை சேர்ந்த தற்பொழுது நியூயார்க்கை இருப்பிடமாக கொண்டுள்ள நஜ்மா கான் என்பவர் ‘உலக ஹிஜாப் தினம்’ என்ற சிந்தனையை முதல் முறையாக முன்வைத்தார். அமெரிக்காவில் ஹிஜாபுடன் வகுப்புக்கு சென்ற இவருக்கு அவரது பள்ளியில் நடந்த பாகுபாடும், அதனால் இழைக்கப்பட்ட மன உளைச்சலுமே இப்படி ஒரு தினத்தை உருவாக்க காராணமாக அமைந்துள்ளது.
ஹிஜாப் என்பது பெண்ணடிமைத்தனம்,
பெண்களை அடிமைப்படுத்தவே இஸ்லாம் பெண்களை ஹிஜாபை அணியுமாறு கட்டளையிடுகிறது.பங்களாதேசை சேர்ந்த தற்பொழுது நியூயார்க்கை இருப்பிடமாக கொண்டுள்ள நஜ்மா கான் என்பவர் ‘உலக ஹிஜாப் தினம்’ என்ற சிந்தனையை முதல் முறையாக முன்வைத்தார். அமெரிக்காவில் ஹிஜாபுடன் வகுப்புக்கு சென்ற இவருக்கு அவரது பள்ளியில் நடந்த பாகுபாடும், அதனால் இழைக்கப்பட்ட மன உளைச்சலுமே இப்படி ஒரு தினத்தை உருவாக்க காராணமாக அமைந்துள்ளது.
22 மொழிகளில் இவர்களுடைய சிந்தனை பரப்புரை செய்யப்படுகிறது. முகநூல்,
வலைத்தளம் என்று இத்தினத்தை பரப்புரை செய்த இச்சகோதரிகளுக்கு உலகின் அனைத்து
பகுதிகளில் இருந்தும் ஆதரவு குவிந்த வண்ணம் உள்ளது அல்ஹம்துலில்லாஹ். இது முஸ்லிம்
மற்றும் முஸ்லிம் அல்லாதவர்களின் மத்தியில் பெரும் தாக்கத்தையும், மாற்றத்தையும்
ஏற்படுத்தியுள்ளது.
உலக முழுவதும் ஐம்பதுக்கும்
மேற்ப்பட்ட நாடுகளில் கொண்டாடப்படும் இத்தினத்தில் முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத
பெண்களால் ஹிஜாப் அணியப்பட்டு உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இவர்களின்
நோக்கம். முஸ்லிமல்லாத பல பெண்களும் இதற்கு முன் வந்து தங்கள் ஒத்துழைப்பை நல்குவதே
இதற்கு கிடைத்த வெற்றியும் சிறப்பும் எனலாம்.
அதனை அணிந்துக் கொள்வதால்
அவர்களின் உரிமை மறுக்கப்படுகிறது, அவர்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள்
என்றும், முடக்கப்பட்டு கிடக்கிறார்கள் என்று இவ்வுலகில் வெற்று கூச்சல் போட
லட்சக் கணக்கானோர் உள்ளனர். ஆனால் அதே ஹிஜாபுக்கு அங்கிகாரம் கொடுக்கப்படும் போது
அதை ஏற்க அவர்கள் உள்ளம் மறுக்கிறது.
இதற்கு காரணம் அவர்கள்
முஸ்லிம் பெண்களின் மீது வைத்துள்ள அக்கறை அல்ல,மாறாக இஸ்லாம் மீதுள்ள வெறுப்பே
அவர்களை இப்படி எதிர்மறையாக சிந்திக்க வைக்கிறது.
இஸ்லாம் என்ற புனித மதம்
பெண்களுக்கு அளித்துள்ள உரிமைகளும் சுதந்திரமும் வேறு எந்த மதத்திலும் இல்லை என்று
சொல்லிக் கொள்வதில் எனக்கு எவ்வித ஐயமோ பயமோ இல்லை.
காரணம் உண்மையில் இஸ்லாம்
பெண்களை அடிமைப் படுத்தி வைத்திருந்தாள் அதனை நோக்கி இத்தனை பெண்கள் தங்களின் சுய
விருப்பத்தோடு ஓடி வர மாட்டார்கள்.
பிறப்பிலே இஸ்லாத்தில் பிறந்த
முஸ்லிம் பெண்களே அதன் பெருமையை பேசினால் அவர்கள் அவர்கள் மதத்தை உயர்த்தவே சப்பைக்
கட்டுகிறார்கள் என்கின்றனர் உண்மையை அறிந்துக் கொள்ள விரும்பாத மூடர்கள்.
இதோ ஆடையில் சுதந்திரம்
பேணி, ஆடை பாதி, மேனி பாதி என்றும், மது, சூதாட்டம், இரவு விடுதி என்று தங்கள்
வாழ்க்கையை ஒரு வரைமுறையற்று வாழ்ந்த, இஸ்லாம் என்றால் தீவிரவாதம்,
பெண்ணடிமைத்தனம் நிறைந்த மார்க்கம் என்று கூச்சலிட்ட எத்தனையோ பெண்கள் தற்பொழுது
இஸ்லாம் என்பது எங்கள் உயிர், ஹிஜாப் எங்கள் சுதந்திரம் என்கின்றனர். அவர்களில்
சிலரின் வார்த்தைகள் ஹிஜாப் பற்றி,
சகோதரி யுவான் ரிட்லி:-
"ஹிஜாப் எங்கள் உரிமை.
நான் முஸ்லிமென்பதை காட்டுகிறது. என்னிடம் மதுவை நீட்டவேண்டாம் என்று சொல்கிறது, என்னிடம் தவறான பேச்சுக்களை பேச
வேண்டாம் என்று சொல்கிறது. இது ஏன் இவர்கள் கண்களை உறுத்துகிறது? என் பண்புகளை பார்த்து
இவர்கள் என்னை மதிக்கட்டும், என் உடைகளை பார்த்தல்ல. அப்படி என் உடைதான் இவர்களுக்கு
முக்கியம் என்றால் அவர்கள் நட்பு எனக்கு தேவையில்லை. ஹிஜாப் அணியாத முஸ்லிம்
பெண்கள், ஹிஜாப் அணியாததற்கு எந்த ஒரு ஆதரவையும் என்னிடம் எதிர்ப்பார்க்க
வேண்டாம்"
ஒருமுறை ஒரு நாட்டில் நடந்த கலந்துரையாடலில், ஒரு பெண் இவரிடம்,
"இந்த நாடு தான் மிகுந்த
வெப்பமுள்ள நாடாயிற்றே... இங்கேயும் நீங்கள் ஏன் ஹிஜாப் அணிந்திருக்கிறீர்கள்?" என்று கேட்டதற்கு,
சகோதரி யுவான் ரிட்லி அவர்கள் சொன்ன பதில், "நரகம் இதைவிட வெப்பமாய் இருக்கும், பரவாயில்லையா?" என்பது...
"புர்காவை வெறுக்க
கற்றுக்கொண்டுள்ளோம் அல்லாமல் புர்காவினுள்ளிருக்கும் பெண்மையையும் அதன் பொன்னரிய
பண்புகளையும் நாம் புரிந்துக்கொள்ளவில்லை" என்று இஸ்லாமை முற்றிலும் வெறுத்து
ஒதுக்கிய பிரிட்டனை சேர்ந்த பத்திரிக்கையாளர், சமூக சேவகர், அரசியல்வாதி என்று பல துறைகளில் சுதந்திரமாக உலா வந்த யுவான் இன்று
இஸ்லாமால் முற்றிலும் ஈர்க்கப்பட்டு என்று இஸ்லாமை வளர்க்க பல அற்புத பணிகளை
செய்துக் கொண்டு வருகிறார். அல்ஹம்துலில்லாஹ்...
மேலை நாட்டில் உள்ள
அனைத்து சுதந்திரத்தியும் அனுபவித்த இவரை ஹிஜாப் அணிய வைத்தது எது??? அவரை
கட்டாயப் படுத்தியது யார்???. இஸ்லாம் என்ற அழகிய மார்க்கமும், அதன் மூலம் பெண்களுக்கு
கிடைக்கும் கண்ணியமும் தான்.
ஸாரா பூக்கர்:-
அமெரிக்காவின் முன்னால்
மாடல் அழகி ஸாரா பூக்கர் 2001
செப்டம்பர் 11-ஆம் தேதி இஸ்லாத்தை ஏற்றபின் ஹிஜாப் பற்றி
குறிப்பிடும் போது பின்வருமாறு குறிப்பிட்டார்.
“முதல் முதலாய் முஸ்லிம்
பெண்கள் தலையை மறைக்க அணியும் துணியை கட்டிக் கொண்டு நான் தினசரி நடந்து செல்லும்
வீதிகளில் நடக்க ஆரம்பித்தேன். அதே வீதியில் தான் நேற்றுவரை கவர்ச்சிகரமான
குட்டையான (ஷாட்ஸ்), நீச்சலுடைகளுடன் நடந்து சென்றேன். வீதியில் அதே பழைய முகங்கள், அதே பழைய கடைகளைத்தான்
பார்க்கிறேன். ஆனால் மிகப் எரிய வேறுபாட்டை என் உள்ளம காண்கிறது. நான் சுந்திரப்
பெண்ணாக இப்போது தான் என்னை நான் உணர்கிறேன். மற்றவர்கள் என் கவர்ச்சியான
உடலமைப்பை ஆசையோடு நோக்கும் அந்தப் பார்வையிலிருந்து தப்பித்து நான் விடுதலை
அடைந்து விட்டது போல். என்னைச் சுற்றியிருந்த விலங்குகள் அறுந்து விழுவது போல்
உணர்ந்தேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கவர்ச்சிகரமான என் உடலமைப்பை
வேட்டையாடும் மனிதர்களிடமிருந்து எனக்கு முழு விடுதலை கிடைத்து வித்ததுஎ ன்று என்
உள்ளம குதூகலிக்கிறது. என் தோள்களில் இருந்து பெரிய சுமை கீழிறக்கி வைக்கப்பட்டது
போல் நான் உணர்ந்தேன் என்று புகழ்ந்துக் கொண்டே போகிறார் ஸாரா பூக்கர்.
ஷெரில் ரம்சே:-
வாழ்க்கை என்பது இன்பம் நுகர்வதற்கே
என்ற காட்டு மிராண்டிக் கொள்கையில் தன் வாழ்க்கையை கழித்த அமெரிக்காவின் மத்திய
தீவில் பிறந்த ஷெரில் கூறுவது.,
முஸ்லிம் பெண்கள்
முழுவதுமாக உடலை மறைப்பது, ஆணாதிக்கத்தின் அடையாளமா? யார் சொன்னது?” என்று
கேட்டுப் போரட்டாக் களத்தில் இறங்க முனைகின்றார் ஷெரில் ரம்சேவாக இருந்த அமாத்துல்லா.
“முக்காடும்
முகத்திரையும், பேணிப் பாதுக்காக்கப்பட வேண்டிய பெண்ணுடலை முழுமையாக மறைக்கும்
உன்னதமான உடைகள். ஆணாதிக்க அடக்கு முறையின் அடையாலங்களல்ல அவை. இஸ்லாம் எங்களுக்கு
வழங்கியை உரிமை இது. மேலை நாடுகளில் பெண்கள் தமது உடலழகைக் காட்டுவது, ஆண்களின் இச்சைப்
பொருள்களாக அளித்தொதுக்கப்படுவதற்கு காரணமாகயுள்ளது! ஆனால், வேடிக்கை என்ன
தெரியுமா? அவர்களின் (யூத, கிறிஸ்தவ) மதங்கள், அவர்களை ஆண்களுக்குச் சமமாகப்
பாவிப்பதற்குக் கூறுவது தான்!” என்கிறார் இந்த ஹெச்.ஐ.வி தடுப்பு இயக்கத் தலைவி
அமாத்துல்லா.
லூதரன் எவாஞ்சலிஸ்ட்:-
வங்கியில் பணியாற்றிக்
கொண்டிருந்த ஜெர்மனியை சேர்ந்த லூதரன் எவாஞ்சலிஸ்ட் என்னும் கைருன்னிசா ஹிஜாப்
பற்றி கூறுவது –
சமூகத்தில் பெண்கள் தமது
பங்களிப்பைச் செய்வதற்கு ‘ஹிஜாப்’ முறை தடைக்கல்லாக நிற்பதாக மற்றொரு
குற்றச்சாட்டும் நிலவுகின்றது. அதனால், ‘ஹிஜாப்’ என்பது ஆணாதிக்கத்தின் ஓர்
அடையாளமாக இருப்பதாகவும் மேலை நாடுகள் கருதுகின்றன.
‘இந்த ஹிஜாப் எங்களை இதர
பாகங்களிலுருந்து துண்டிக்கும் பிற்போக்குச் சாதனமா? அல்லது நமது ஊடகங்கள் கூறுவது
போன்று, பெண்களின் சுதந்திரத்தைத் தட்டிப் பறிப்பதுவா? அல்லது பெண்ணினத்தின்
பலவீனமா? அல்லது ஆணாதிக்கத்தின் முன்புள்ள இயலாமையா? இல்லையில்லை! ஆண் – பெண் சமூகத்
தொடர்புக்கு ஓர் ஒழுங்குமுறையினை நிலை நாட்டும் அருமையான அடையாளம் தான் ‘ஹிஜாப்’.
நான் என்னைப் படைத்தாளும்
அல்லாஹ்வுக்கே – அவனை அஞ்சியே – இந்த ‘ஹிஜாப்’ அணிகிறேன். இது என்னை இஸ்லாத்தில்
உறுதியாக நிலைத்திருக்கச் செய்கிறது. நான் பெண் தான் – ஆணில்லை என்ற உணர்வை எனக்கு
எடுத்துரைக்கின்றது.
இப்படி சுந்தந்திரத்தின்
உச்சியில் வாழ்ந்து இறுதியில் இஸ்லாமே அனைத்திற்கும் தீர்வு என்று முழு மனதோடு
இஸ்லாத்தை தழுவி ஹிஜாபை பெருமைபடுத்தும் எண்ணற்ற பெண்களின் கருத்தை நாம் சொல்லிக்
கொண்டே போகலாம். அது முடியாத ஒரு பட்டியல்.
தவக்குல் கர்மான்:-
பிரபலம டைம் மாத இதழான
பெர்சன் ஆஃப் தி இயரில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஏமன்
நாட்டை சேர்ந்த தவக்குல் கர்மான் தன்னுடைய பரிசை மேடையேறி வாங்கும் போதும் கூட
பெருமையின் மிதப்பில் மாடர்ன் உடை அணியவில்லை, மாறாக கண்ணியமான ஹிஜாபை அணிந்துக்
கொண்டே மேடை ஏறினார்.
கர்மானிடம் ஒரு
பத்திரிகையாளர் கேள்வியொன்றை எழுப்பினார், “ஏன் நீங்கள்
ஹிஜாபை அணிகின்றீர்கள்? அது எவ்வாறு
உங்களுடைய கல்விக்கும், அறிவுக்கும்
பொருந்துகிறது?” என்று.
தவக்குல் கர்மான்
இவ்வாறு பதிலளித்தார்: “ஆதி மனிதர்கள் நிர்வாணமாக இருந்தார்கள். அவர்களுடைய அறிவு வளர்ச்சி அடைந்த
பொழுது ஆடையை அணியத் துவங்கினார்கள். நானும், எனது ஆடை முறையும் பிரதிபலிப்பது மனிதன் பெற்ற
மிகவும் உன்னதமான கலாச்சாரத்தை ஆகும். மனிதன் மீண்டும் நிர்வாணமாக மாறுவது அவன்
தனது துவக்க காலத்தை நோக்கி செல்வதன் அடையாளமாகும்.” என்றார்.
ஹிஜாப் என்பது
அடக்குமுறை, அது பெண்களை அடிமைப் படுத்துகிறது, பின்னுக்கு தள்ளுகிறது, அறிவை
இழக்க செய்கிறது என்னும் கீழ்த்தரமான எண்ணங்களை உடைத்தெரிகிறார்கள் பின்வரும் பெண்மணிகள்:-
·
முதன் முதலில் ஹிஜாப்புடன்
விமான ஓட்டுனராக பணிபுரிந்த பாகிஸ்தானிய பெண்மணி
கணினி மற்றும் இணைய நிறுவனங்களான கூகுள்
மற்றும் மைக்ரோஸாஃப்ட் ஆகியவை, ஹிஜாப் அணிந்த பெண்மணி ஒருவர் உருவாக்கிய
மென்பொருளை வாங்க போட்டி போடுகின்றன. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடமிருந்து
வெள்ளை மாளிகைக்கு விருந்துண்ண வாருங்கள் என்று அழைப்பு வந்துள்ளது. உலகில்
பல்வேறு இடங்களிலிருந்து பாராட்டு மழை பொழிகிறது.
தமது சாதனைகளையும், எதிர்காலத் திட்டங்களையும்
விவரிக்க வாஷிங்டனுக்குக் கிளம்பிக் கொண்டிருக்கிறார் அப்பெண்மணி.
சிறிதளவு கம்ப்யூட்டர்
அறிவு கொண்ட சாமான்யர் எவரும் தம் தேவைக்கும் விருப்பத்துக்கும் ஏற்ற வீடுகளைத்
தாமே வடிவமைத்துக் கொள்ளும்படியான கட்டிடக்கலை வடிவமைப்பு (architectural designs) மென்பொருளை உருவாக்கி சாதனை புரிந்துள்ளார். அவ்வளவு தான்!
அவர் ஹிஜாப் பற்றி
கூறுகையில்:-
ஹிஜாப் அணிந்த பெண்கள் குறைந்த செயல்திறன் கொண்டவர்கள்!" என்ற
மேற்கத்தியர்களின் தவறான சிந்தனையை மாற்றுவேன் இன்ஷா அல்லாஹ்! மேலும், நான் அணிந்துள்ள ஹிஜாப், என்னுடைய திறமையை எவ்விதத்திலும் பாதிக்க வில்லை என்பதை அவர்களுக்கு
உணர்த்துவேன்.
ஆம் உண்மையே!!!
ஹிஜாப் என்பது முன்னேற்றத்திற்கான ஒரு ஆடையே அன்றி, பின்னோக்கி செல்லும் ஆடையற்ற
ஆதிகால ஆதிவாசி கலாச்சாரம் அல்ல.
ஹிஜாப் அணிவதால்
உங்களுக்கு கண்ணியம் கூடுகிறது, கயவர்களின் பார்வையில் இருந்து காத்து, பாலியல்
வன்மை கொடுமைகளில் இருந்து முற்றிலும் உங்களை பாதுகாக்கிறது.
தனியே எங்கு செல்லவும்
ஊக்கமளிக்கிறது. ஏனெனில் ஹிஜாப் என்ற கவசத்தை அணியும் பொழுது அதை சட்டமாக்கிய வல்ல
இறைவனே நம்முடன் துணையாக இருக்கின்றான் என்ற எண்ணமே நம்மை முன்னேறச் செய்கிறது
எவ்வித எதிர்ப்பு வந்தாலும்.
உடல் அங்கங்களை
மறைக்க உதவும் ஹிஜாப், எவ்விதத்திலும் உங்கள் மூளை திறனை மறைக்கவோ தடுக்கவோ இல்லை என்பதை
நிருபிக்க மேற்க்கண்ட சாதனை பெண்மணிகள் மிகப் பெறும் சாட்சி.
இவர்களை போன்ற
எண்ணற்ற முஸ்லிம் பெண்மணிகளும், புதியதாக இஸ்லாத்தை விரும்பி ஏற்றுக் கொண்ட
பெண்களும் உலகம் முழுவதும் பல சாதனைகளை சாகசங்களை புரிந்துக் கொண்டே
இருக்கிறார்கள் ஹிஜாப்புடன், இன்னும் புரிவார்கள் இன்ஷா அல்லாஹ்.
ஆடை அணிவது எங்கள்
சுதந்திரம் அதை தட்டி கேட்க யாருக்கும் உரிமை இல்லை என்று முழக்கமிடும் பெண்களே!!! உங்கள் கற்புக்கு ஒரு பங்கம் வந்தால் அப்போது அதை தட்டி கேட்க அரசும், மக்களும்
முன் வர வேண்டுமென்று எதிர் பார்ப்பது எவ்வகையில் நியாயம்??
(நபியே!) இறைநம்பிக்கை கொண்ட பெண்களிடம் கூறும்: அவர்கள் தங்களுடைய பார்வைகளைப் பேணிக் கொள்ளட்டும். தங்களுடைய வெட்கத் தலங்களைப் பாதுகாக் கட்டும்; தங்களுடைய அழகை வெளியில் காட்டாதிருக்கட்டும்; அதிலிருந்து தாமாக வெளியே தெரிகின்றவற்றைத் தவிர! மேலும், தங்களுடைய மார்புகள் மீது தங்கள் முன்றானையைப் போட்டுக் கொள்ளட்டும். (24:31)
Courtesy To:
- Thoothuonline
- Jaffnamuslim
- Sathyamargam
- Ethirkural
masha allah
ReplyDelete