குழந்தையின்மை – குற்றம் 23

காலங்காலமாக பெண்களுக்கு உள்ள பல தலையாய பிரச்சினைகளில் குழந்தையின்மையும்  ஒன்று. எத்தனை நவீனமாக உலகம் மாறினாலும் சில பிரச்சினைகள் மட்டும்  நவீனத்துவத்துக்கு ஏற்ப மாறி வருகிறதே தவிர அதற்கு தீர்வு என்ற ஒன்று அமைவதே இல்லை எனலாம்.

உடலளவில் குழந்தை பெறுவதற்கு கணவன், மனைவி இருவரில் யாருக்கு பிரச்சினை இருந்தாலும் மனைவியை மட்டும் குற்றவாளியாக்குவதும், கொடுஞ்ச்சொற்களை வீசுவதும், உற்றார் உறவினர் “ஒரு குழந்தை பெத்துக்க கூட லாயக்கில்லை என்ற” கொடும் பார்வையால் சுட்டெரிப்பதும், இதையெல்லாம் மீறி ஒரு ஆணுக்கு எத்தனை பெரிய குறைகள் இருந்தாலும் மருத்துவம் என்பது பெண்ணையே சார்ந்துள்ளது. அந்த பெண்ணுக்கே அனைத்து விதமான வலிகளையும் உடலளவிலும் மனதளவிலும் தருகிறது.

இது போன்ற சமுதாயத்தின் தண்டனைகளால் தன்னை ஒரு குழந்தைக்கு தாய் தந்தையராக்க அந்த தம்பதியினர் எவ்வித மருத்துவமும் செய்துக் கொள்ள தயாராகின்றனர்.

மனிதர்களின் பலவீனத்தை அறிந்தே பலவித வியாபாரங்கள் அவர்களை ஆட்டுவிக்கின்றது என்றாலும் சேவை மனப்பான்மையுடன் நடத்த வேண்டிய மருத்துவர்களும் மருத்துவமும் வியாபாரம் ஆகி பல காலங்காளாகி போனது வேதனைக்குரிய விசயம்.



இதனை மையக் கருவாக கொண்டு வெளிந்த வந்த திரைப்படமே “குற்றம் 23“. இத்திரைப்படத்தில் பல கோணங்கள், கருத்துகள் உண்டு என்றாலும் குழந்தையின்மை பற்றி மையக் கருத்தாகக் கொண்டு வெளி வந்த இத்திரைப்படத்தை மேலோட்டமாக பார்த்தால்,

*சில வருடங்களாக குழந்தை இல்லாத ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்து சென்ற குடும்பம் எவ்வாறு வலிகளை தருகிறது. அதனால் அப்பெண் அனுபவிக்கும் மன உளைச்சல், வாழ்க்கையை இழந்து விடுவோமோ என்ற பயம் 

*தன் பிள்ளைக்கே குறை இருந்தாலும் அதை உணராமல் ஆண் என்பதால் அடுத்த வாழ்க்கையை எளிதாக அமைத்துக் கொள்ளலாம், கொடுக்கலாம்

*குழந்தை அற்றவர்களை, அவர்களின் வலியை வேதனையை எவ்வாறு மருத்துவர்கள் வியாபார யுக்தியாக மாற்றுகின்றனர்

*"குழந்தை இல்லை என்ற பேச்சுக்கே இடமில்லை" என்ற ரீதியில் மருத்துவம் வளர்ந்துவிட்டது.

*மருத்துவர்கள் நினைத்தால் யாரையும் யார் குழந்தையும் பெற்றுக் கொள்ள செய்யலாம். மருத்துவமனையின் பெயரை நிலைநாட்ட கணவன், மனையின் சொந்த உயிரணு மற்றும் கருமுட்டை என்ற பெயரில் மற்றவர்களின் உயிரணுக்களையும் கரு முட்டையையும் குழந்தை பெற்றுக் கொள்ள போகும் தம்பதியினரின் அனுமதியின்றி கர்பப்பையினுள் செலுத்தலாம்.

*கணவன் அல்லது மனைவியின் உண்மை உடல் குறையை தெரிவிக்காது மருத்துவர்களே சுய முடிவு எடுப்பதால் அப்பெண்ணுக்கோ கணவனுக்கோ ஏற்ப்படும் அவப் பெயர்.

போன்ற சாதாரண கருத்துகள் மட்டுமே ஒரு சாமானிய மக்களாக பார்க்கும்  நமக்கு புலன்படும் எனலாம்.

அதையும் மீறி சற்று உற்று நோக்கினால் பல வில்லங்கத்தை மறைமுகமாக சிலரின் மத்தியில் விதைப்பதே இப்படத்தின் நோக்கம் எனலாம். அதாவது பெண்ணியம் பேசிக் கொண்டும், மேலை நாட்டு கலாச்சாரங்களை சுமந்துக் கொண்டு தன் வாழ்க்கையை நிர்ணயம் செய்ய அந்நாட்டின் கலாச்சாரமோ, குடும்ப பாரம்பரியமோ எவ்வித தடையுமில்லை என்று அலையும் பெண்களுக்கு என்று கூறலாம். இவர்களின் மனதில் அத்திரைப்படம் விதைக்க முற்படும் தவறான விசயங்கள் என்னவெனில்,

*ஒரு பெண் குழந்தை பெற்றுக் கொள்ள அவரது கணவரே அவசியமில்லை. அவரது அனுமதியும் தேவை இல்லை. ஏனெனில்,

*ஒரு பெண்ணின் கர்ப்பப்பை என்பது அவளுக்குரிய உரிமை, அவள் சொந்தம்.

*அவளுக்கு சொந்தமான ஒன்றில் யாருடைய குழந்தையை சுமக்க வேண்டும் என்ற உரிமை அவளுக்கு மட்டுமே உள்ளது. அது கல்யாணத்திற்கு முன்பா பின்பா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம்.

*தனது கணவனின் குழந்தையையா அல்லது தான் விரும்பும் யாரோ ஒருவரின் குழந்தையையா அதாவது தனக்கு பிடித்த நடிகர், பிரபலங்கள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் என்று யார் போல் தன் பிள்ளை இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவ்வாறே முடிவெடுத்துக் கொள்ளலாம். குழந்தையையும் பெற்றுக் கொள்ளலாம்.

*தங்களுக்கு பிடித்தவர்களை போல் தாங்களும் பிள்ளை பெற்றுக் கொள்ள மருத்துவம் எல்லா வகையிலும் கை கொடுக்கிறது.

*நீங்கள் தேர்ந்தெடுக்கும் நபரின்  அணுக்களை, அவரது ஜீன்களை உங்கள் கருமுட்டையுடன் ஒன்றிணைய செய்து குழந்தையை உருவாக்க முடியும். அவர்களின் குணாதிசயங்களுடன் பிள்ளை பெற்று பிரபலாமக்க முடியும்.

என்பது போன்ற பல வில்லங்க செய்திளை மேற்சொன்ன சிலரின் மனதில் பதியச் செய்து ஒரு புரட்சியை உங்களால் செய்ய முடியும் என்ற சமூகத்துக்கு, நம் நாட்டு கலாச்சாரத்திற்கும் தீங்கு விளைவிக்கும் கருத்துக்களை விதைக்க முனைகிறார்கள்.

அதில் உள்ள நோக்கம் என்ன, வியாபாரம் என்ன என்பதை எல்லாம் சிந்திக்க மறுக்கும் போராளிகள் தான் இந்த புரட்சியை கண் மூடிச் செய்ய துணிகிறார்கள். காரணம் மருத்துவர்கள் சொல்வதெல்லாம் உண்மை, எதையும் அவர்களால் செய்ய முடியும் என்ற அசட்டுத்தனமான நம்பிக்கையை தான் படித்த கல்வி தந்துவிட்டதாக அவர்கள் நம்புகின்றனர். தான் எடுக்கும் எல்லா முடிவுகளும் சரியானது, நேர்மையானது என்று தன்னைத்தானே முட்டாளாக்கி கொள்ளத் துடிக்கின்றனர். ஆனால் அதில் உள்ள சூழ்ச்சமதத்தை அவர்கள் கற்றுக் கொடுத்த கல்வி அவர்களுக்கு புரிய வைக்கவில்லை என்பதை சிந்திக்கவே மறுக்கின்றனர். 

நாம் தேர்ந்தெடுக்கும் பிரபலத்தின் அணுக்கள் தான் நமக்கு செலுத்தப்பட்டுள்ளதா என்பதற்கு எந்த வித ஆதாரமும் இல்லை. பிள்ளையை பெற்ற பின்னும் அதனை நிருபீக்க பிரபலங்களிடம் டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து கண்டுபிடிக்கவும் வழியில்லை காரணம் மருத்துவர்களின் வியாபார யுக்திக்கு பிரபலங்கள் என்ற வார்த்தை பிரயோகம் மட்டுமே உங்களுக்கு கொடுக்கப்படும் பரிசாக இருக்குமே தவிர உங்கள் பேராசைக்கு அவர்களின் திருட்டுத்தனமே பதிலாக கிடைக்கும்.

இப்படத்தின் முக்கிய கதைக் கரு மேற்சொன்ன விசயங்கள் எனினும், ஒரு ஆண் நினைத்தால் எத்தனை பேருக்கும் மறைமுக கணவராகவும், நேரடி அப்பாவாகவும் மாற முடியும் என்ற மற்றொரு வில்லங்கம் தான் வில்லன் கேரக்டர். 

அதாவது தன்னால் ஒரு பிள்ளையை பெற்றுக் கொள்ள விரும்பாத மனைவியை கொல்வதோடு, தான் விரும்பும் அல்லது விரும்பாத பெண்களுக்கு தன் உயிர் அணுக்களை அவர்களுக்கு தெரியாமலேயே செலுத்துவதும், தான் நினைத்தால் ஒரு கர்பப்பை என்ன? எத்தனை பெண்களின் கர்ப்பபையிலும் தன் குழந்தையை சுமக்க வைக்க முடியும் என்ற கேவலாமான கருத்தை விதைப்பதோடு, ஆண் என்றால் எந்த எல்லைக்கும் செல்லலாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கர்வத்தை, திமிரை ஆண்களின் மனதில் அச்சிலட முற்ப்படுகின்றனர்.

மேலும் மேற்சொன்ன பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் போன்றோர் எல்லாம் தங்கள் உயிர் அணுக்களை இது போன்ற வியாபராத்திற்காக விற்பனை பொருட்களாக பயன்படுத்துகின்றனர் என்ற மறைமுக கருத்தும் இதில் உண்டு என்பதையும் மறக்க வேண்டாம்.

ஒரு திரைப்படம் என்பது என்ன நோக்கத்திற்காக வெளியிடுகிறோம், அதில் மக்களுக்கு என்ன கருத்தை விதைக்கிறோம் திரைப்படங்களை எடுப்பவர்களோ, அதை அனுமதிப்பவர்களோ சிந்திப்பதில்லை.

பொழுது போக்கிற்காக எடுக்கப்படும் சில திரைப்படங்களை காட்டிலும் இது போன்ற சமுதாயத்தை புரட்டிப்போடும், தீங்கு விளைவிக்கும் படங்களை எவ்வாறு திரைப்படத் துறையை சார்ந்த நிர்வாகிகள் அனுமதிக்கின்றனர் என்பது புரியவில்லை. பணம் என்றால் அவர்களுக்கு மட்டுமென்ன விதிவிலக்கா??

தங்களது பொருளையும் நேரத்தையும் வீணடித்து திரைப்படங்களை காண செல்லும் பலருக்கும்  அத்திரைப்படங்களின் மூலம் கிடைக்கும் அதிர்ச்சிகரமான கருத்துகள் அபாயகரமானதாக இருப்பது வேதனைக்குரிய விஷயம். அதை அறியாமல் படங்களில் வருவதை போல் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முற்படும் சிலரின் வாழ்க்கையை நினைத்தால் அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை.


குழந்தையின்மை என்ற ஒன்றை இருவர் சம்மந்தப்பட்ட தனிப்பட்ட விஷயமாகவும், இதில் மூன்றாம் நபர் அதாவது அவர்கள் இருவரை பெற்ற பெற்ரோர்களாகவே இருந்தாலும் தேவையற்ற பேச்சுக்கள் பேசி குத்திக் காட்ட உரிமை இல்லை என்பதை எப்போது உணர்கிறார்களோ அப்போது தான் இது போன்ற பிரச்சினை உள்ளவர்கள் இந்த சமுதாயத்தில் இயல்பாக வாழ முடியும், தன்னை குற்றப்படுத்தி பேசுபவர்கள் முன்னிலையில் தன் தாய்மையை, ஆண்மையை நிருபீக்க மருத்துவ வியாபாரத்தில் அவர்களும் சிக்க முனைய மாட்டார்கள். அதனால் யாரென்ற தெரியாத மூன்றாம் நபரின் வாரிசை தனக்கே அறியாமல் தன் வாழ்க்கைக்குள் கருவறை மூலம் வரவேற்க மாட்டார்கள்.

இறைவனால் சாத்தியப் படக் கூடிய ஒன்றை மனிதர்களையும் அவர்களால் கொண்டு வரப்பட்ட கருவிகளையும் கண் மூடித்தனமாக நம்பி செல்லும் போது இது போன்ற அசாதாரண விளைவுகளை நாம் காண நேரிடுவது மருத்துவ உலகிற்கு இறைவன் விடும் சவால் எனலாம்.

உங்கள் சகோதரி,
யாஸ்மின் ரியாஸ்தீன்

Comments

  1. அல்லாஹூ....
    உங்கள் பதிவில் சொல்லியிருக்கும் விஷயங்கள் ஒவ்வொன்றும் மனசுக்குள் ஏதோ பகீரென்ற உணர்வை ஏற்படுத்துகின்றது தோழி யாஸூ....
    உலகம் வியாபர ரிதியாக போய்கிட்டு இருக்கு என்பதற்கு இந்த விஷயமும் ஒரு சான்றாகவே இருக்கின்றது....
    சுபஹானல்லாஹ்....
    நன்றாக எழுதியிருக்கின்றீர்கள் மா....
    சீரியஸான விஷயத்தை பதிவாக்கி இருப்பது பாராட்டுக்குறியது....
    தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி தோழி....

    ReplyDelete
    Replies
    1. ஜசக்கல்லாஹ் ஹைரன் சிஸ்.. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி..

      Delete
  2. அருமை, சமுகத்துக்கு சாட்டை அடி பதிவு...(y)

    ReplyDelete
    Replies
    1. ஜசக்கல்லாஹ் ஹைரன் ப்ரோ.. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  3. அருமை அக்கா அருமை

    ReplyDelete
    Replies
    1. ஜசக்கல்லாஹ் ஹைரன் ப்ரோ.. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete

Post a Comment

Popular posts from this blog

~~~~நேர்மறை எண்ணம் கொள்வோமாக!!!~~~~

ஷார்ஜா சர்வேதச புத்தக கண்காட்சியும், நானும்!!!

37-வது ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியும், எனது அனுபவமும்