~~~~நேர்மறை எண்ணம் கொள்வோமாக!!!~~~~
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்...
அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்தஹு....
நம்முடைய ஒவ்வொரு செயலும் எண்ணப்படியே அமைகின்றன. அது உடனடியாக இருக்கலாம் இல்லையெனில் சற்று காலங்கள் கழித்தும் நடக்கலாம். இதனால் நாம் என்னும் எண்ணங்கள் நல் வழியில் அமைத்துக் கொண்டால் அதன் பலனும் நன்மையாகவே அமையும், இதனால் தீமையை விட்டு விலகி நிற்போம்.
ஒரு வேளை நாம் எண்ணும் அந்த
செயல் நடக்காமல் போய் விட்டால், அதை நினைத்து வருந்தி நம் எதிர்கால சிந்தனையையும்,
செயல்களையும் வருத்திக் கொள்ளாமல், எது நடந்தாலும் நன்மைக்கே என்ற நேர்மறை எண்ணம் (Positive Thinking) கொள்வது அந்த ஒரு செயல் நடக்காமல் போனாலும், நாம் எதிர்கொள்ளும் மற்ற செயல்களை
கவனத்துடன் மேற்க் கொள்ள உதவும், வெற்றிக் கொள்ள உதவும், மன அழுத்தத்தில் இருந்து
நம்மை விடுவிக்கும்.
நாம் ஒன்றை நடக்கும் என்று எண்ணியோ அல்லது ஒன்றை எதிர்பார்த்ததோ நடக்காவிட்டால் அதன் மூலம் வேறு எதோ நன்மை இருக்கிறது என்று நம்புவதே சிறந்த நேர்மறை என்னத்திற்கு அழகு, விரக்தி அடைவதால் கடவுளின் நாட்டம் இன்றி எதையும் நம்மால் மாற்றி அமைக்க இயலாது.
அந்நிலையில் நமக்கு கீழ் உள்ளவர்களை நாம் எண்ணிக் கொண்டால் நம் மனம் வெகு வேகமாக இலேசாக மாறும். இன்ஷா அல்லாஹ்...
நாம் ஒன்றை நடக்கும் என்று எண்ணியோ அல்லது ஒன்றை எதிர்பார்த்ததோ நடக்காவிட்டால் அதன் மூலம் வேறு எதோ நன்மை இருக்கிறது என்று நம்புவதே சிறந்த நேர்மறை என்னத்திற்கு அழகு, விரக்தி அடைவதால் கடவுளின் நாட்டம் இன்றி எதையும் நம்மால் மாற்றி அமைக்க இயலாது.
அந்நிலையில் நமக்கு கீழ் உள்ளவர்களை நாம் எண்ணிக் கொண்டால் நம் மனம் வெகு வேகமாக இலேசாக மாறும். இன்ஷா அல்லாஹ்...
இப்படித்தான் ஒரு புதுப்
பேச்சாளர் ஒரு மேடைப் பேச்சுக்கு ரெடியாகி கொண்டிருந்தார். தன்னை பிரபலப்படுத்த
விரும்பி, தானே தன் சொந்த செலவில் ஒரு நிகழ்ச்சியையும் ஏற்ப்பாடு செய்து, பலரை நிகழ்ச்சிக்கு
அழைத்தும் இருந்தார்.
முதன் முதலில் மேடையில் பேச
போவதால் ஒரு வித படபடப்பும், டென்சனும் அவரை ஆட்பறித்தது. எவ்வாறு பேசுவோமா என்ற
பயம் தான்.
ஒரு விதமாக தன்னை
தயார்ப்படுத்திக் கொண்டு கடைசியாக பேசுவதற்காக மேடைக்கும் போய் விட்டார், மேடையை
தவிர மற்ற இடங்களில் எல்லாம் லைட் ஆஃப் ஆகி இருந்தது.
மனதுக்குள் ஒருவித படபடப்பு,
ஏன் லைட் எல்லாம் ஆஃப் ஆகி இருக்கு, ஒரு வேளை நிறைய கும்பல் வந்து இருக்குமோ நம்
பேச்சை கேட்க என்று தன்னை தானே தேத்திக்
கொண்டார்.
அவர் பேசும் நேரம் வந்ததும்,
அவர் தன் பேச்சை தொடங்க ஆரம்பித்தார். லைட்ஸ் எல்லாம் ஆன் ஆனது, பேச ஸ்டார்ட்
பண்ணவருக்கு பயங்கர ஷாக்.
ஏனென்றால் அந்த மிகப்
பெரும் அரங்கில் அவர் எதிர் பார்த்த அளவில் ஒரு கும்பலும் இல்லை, ஒரே ஒருவர்
மட்டும் இருந்தார். அப்பவும் அவர் பேச்சை நிறுத்தவில்லை. ஒரு வழியாக தன் பேச்சை
முடித்து, அங்கு வந்து இருந்த ஒருவருக்கு நன்றி சொல்லிவிட்டு கீழே இறங்கி வந்தார்.
ஏங்க சார் இவ்வளவு பெரிய
அரங்கத்தில் யாருமே இல்லை, என் ஒரு ஆளுக்காக எதுக்கு நீங்க பேசணும் நிகழ்ச்சியை
நிறுத்தி இருக்காலமே என்று கேட்டார்.
அதற்கு அவர் சொன்னார்,
இவ்வளவு நாள் பேச பழகி கொள்ளும் தருணங்களில் என்னுடைய கையையும் கரண்டியையுமே
மைக்காக பேசி இருக்கேன்.
யாரும் இல்லாத என்னுடைய
சிறு அறையில் கண்ணாடி முன்னாடி என் முகத்தை நானே பார்த்துக் கொண்டு, என் பேச்சை
நானே கேட்டுக் கொண்டு பேசி பழகி இருந்தேன்.
ஆனால் இன்று எனக்காக மிகப்
பெரும் அரங்கு, எனக்கே எனக்கு என்று மேடை, மைக், ஸ்பீக்கர் என்ற சகல வசதிகளும்
என்னைத் தவிர என் பேச்சை கேட்க நீங்களும்,
மேலும் இந்த புது அனுபவம் என்னை மேலும் பல மேடைகளை சந்திக்க தூண்டுகிறது,
அனைத்தும் இறைவன் நாட்டப்படியே நடக்கிறது என்று அழகான நேர்மறை எண்ணத்தை அவருக்கு பதிலாக
கொடுத்தார்.
மாறாக யாரும் வரவில்லையே,
பணம் போய் விட்டதே, நேரம் போய் விட்டதே, இனி எங்கும் போய் பேசவேக் கூடாது என்று
எதிர்மறையாக அவர் சிந்திக்கவும் இல்லை, பேசவும் இல்லை.
எது நடந்தாலும் அது இறைவன் நாட்டப்படி நடக்கிறது, நன்மைக்காகவே
அமைகிறது என்ற நேர்மறை எண்ணம் நம்மை முன்னேற்றக் கூடிய உந்து சக்தியாக அமையும், வாழ்க்கையையும், கடினமான தருணங்களையும் மிக இலகுவாக பயணிக்க உதவும்.
எதிர்மறை எண்ணம் (Negative Thinking) என்பது நம்மை சிந்திக்க விடாது மூளையை மழுங்கச் செய்து மேலும் மேலும்
தோல்வியையும் தீமையின் வழியிலும் அழைத்து செல்லும்.
.
நேர்மறை எண்ணத்திற்கு மேலும்
ஒரு எடுத்துக் காட்டு, சமீமபாக எதோ ஒரு வலைத்தளத்தில் படித்த நினைவு:
தந்தை
கொசு: உன் முதல் வேட்டை அனுபவம் எப்படி இருந்தது
???
குழந்தை
கொசு: மிகப் பிரமாதம் மனிதர்கள் என்னைக் கைதட்டி
வரவேற்றார்கள் !!!
மனிதர்கள்
தன்னைக் கொல்லவதற்காகவே கையை தட்டினார்கள் என்று வருந்தாமல், கைதட்டி வரவேற்றார்கள் என
நேர்மறையாக பார்ப்பது மிகச் சிறந்த நேர்மறை எண்ணம்.
அதுபோல் மனிதர்களும் நமக்கு நடக்கும் அனைத்து விஷயங்களையும் இறைவனின் நாட்டப்படி அமைகிறது என்று நேர்மறையாக எடுத்துக் கொண்டால் மனதில் கலக்கம் இருக்காது!! என்றும் மகிழ்வே!!!
அதுபோல் மனிதர்களும் நமக்கு நடக்கும் அனைத்து விஷயங்களையும் இறைவனின் நாட்டப்படி அமைகிறது என்று நேர்மறையாக எடுத்துக் கொண்டால் மனதில் கலக்கம் இருக்காது!! என்றும் மகிழ்வே!!!
நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீங்கள் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுத்துக்
கொள்வீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரே போல் ஆகிவிடுவார். (அல்
குர்ஆன்: 41:34)
இறைவைனின் வாக்கிற்கு ஏற்ப தூய்மையான நல்ல நேர்மறை சிந்தனைகளை கொண்டு தீயதை தடுப்போமாக!!! ஈருலக வாழ்விலும் வெற்றி பெறுவோமாக!!!
இறைவைனின் வாக்கிற்கு ஏற்ப தூய்மையான நல்ல நேர்மறை சிந்தனைகளை கொண்டு தீயதை தடுப்போமாக!!! ஈருலக வாழ்விலும் வெற்றி பெறுவோமாக!!!
உங்கள் சகோதரி
யாஸ்மின் ரியாஸ்தீன்
டிஸ்கி: என்னுடைய பிளாக்கிற்கு ஒரே ஒருவர் மட்டும் படிக்க வந்தாலும், யாருமே வராத எத்தனையோ பிளாக் இருக்கும்போது எனக்காக ஒருவராவது வந்தாங்களே என்று நேர்மறை எண்ணம் கொண்டு மேலும் மேலும் எழுதி உங்கள் அனைவரையும் கொல்வேன். ஹி ஹி ஹி..
டிஸ்கி: என்னுடைய பிளாக்கிற்கு ஒரே ஒருவர் மட்டும் படிக்க வந்தாலும், யாருமே வராத எத்தனையோ பிளாக் இருக்கும்போது எனக்காக ஒருவராவது வந்தாங்களே என்று நேர்மறை எண்ணம் கொண்டு மேலும் மேலும் எழுதி உங்கள் அனைவரையும் கொல்வேன். ஹி ஹி ஹி..
வாழ்த்துகள்
ReplyDeleteமாஷா அல்லாஹ்,இப்போதய காலத்திற்கு ஏற்ற தன்னம்பிக்கை ஊட்டும் தலைப்பே அருமை!பதிவுகளும் அப்படியே அமைய என் வாழ்துக்கள்
ReplyDelete
ReplyDeletemasha allah ,first n best one yasmin.. keep it up.. தந்தை கொசு-மகன் கொசு அருமையான உதாரணம்
முதல்பதிவு
ReplyDeleteமுத்தானா பதிவாக இருந்தது..
" பாசிடிவ் திங்க் "
எண்ணம்போல வாழ்வு.
சிந்தனைகள் தொடரட்டும்..
நல்ல தொடக்கம் வாழ்த்துகள்
ReplyDeleteஅருமையான ஆக்கம்
ReplyDeleteபாராட்டுக்கள்
டெம்ளட் கொஞ்சம் கண்ணை அடிப்பது போலிருக்கிறது சரி செய்துக்கொள்ளுங்கள்
அஸ்ஸலாமு அலைக்கும்.......
ReplyDeleteஅருமையான தொடக்கம் சகோ யாஸ்மீன்.பயனுள்ள கருத்துக்கள். எளிமையான எழுத்து நடை. மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள்.
என்னுடைய பிளாக்கிற்கு ஒரே ஒருவர் மட்டும் படிக்க வந்தாலும், யாருமே வராத எத்தனையோ பிளாக் இருக்கும்போது எனக்காக ஒருவராவது வந்தாங்களே என்று நேர்மறை எண்ணம் கொண்டு மேலும் மேலும் எழுதி உங்கள் அனைவரையும் கொல்வேன். ஹி ஹி ஹி..
/// மேலும் மேலும் எழுதுங்க. அதுக்காக எங்களைக் கொல்லாதீங்க உங்க ப்ளாக்க படிக்க இருக்கிற சிலரையும் கொன்னுட்டீங்கணா கம்மென்ட்டுக்கு என்ன பண்ணுவீங்க :P ......
அஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteநல்ல தொடக்கம். தொடர்ந்து எழுதுங்க...
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ
மாஷா அல்லாஹ். நல்ல வரவு. வரும் போதே பாஸிட்டிவ் திங்கிங் ஓட வந்திருக்கீங்க. ஆனா இது கலவர பூமி அப்படின்னு நெகட்டிவா சொல்லாம, உங்கள நீங்க தெரியப்படுத்திக்க, உங்கள நீங்களே வீரமாக ஆக்கி கொள்ள இந்த வலைத்தளம் ஒரு மிகப்பெரிய ஆயுதம்னு பாஸிட்டிவா சொல்லி வரவேற்கிறேன்
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ் இன்னும் நிறைய எழுதி பல பேரை கொல்லாமல் அன்பு கொள்ள வைக்க வேண்டும்.
தோழமையுடன்
அபு நிஹான்
ப்ளாக் உலகிற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம். கலக்குங்க கலக்குங்க, நாங்களும் கலங்கறோம்... ஹா... ஹா...! உண்மையிலேயே முதல் பதிவு ரொம்ப நல்லா இருக்குப்பா...! (நான் ஏற்கனவே மொபைலில் இருந்து கமென்ட் போட்டேன்ப்பா ஆனா அதை காணோம். அதான் மறுபடியும்...
ReplyDeleteஊடக உலகில் ஒளி பாய்ச்ச வந்திருக்கும் உங்களை வருக வருக என்று வரவேற்கிறோம். முதல் பதிவே முத்தான பதிவு. மேலும் மேலும் உங்கள் எழுத்தொளி பரவ வாழ்த்துக்கள்.
ReplyDelete:-) :-)) :-)))
ReplyDeleteபதிவுலகிற்கு வருக வருக என்று வரவேற்கிறேன்...
பாஸிட்டிவாக தொடங்கி இருக்கும் பதிவுல வாழ்க்கை ஏற்றங்களாகவே தொடர மனம் நிறைந்த வாழ்த்துக்கள்...
அஸ்ஸலாமு அலைக்கும் யாஸ்மின்!
ReplyDeleteநல்ல பதிவு, தொடருங்க... இன்ஷா அல்லாஹ்.
அஸ்ஸலாமு அழைக்கும் !
ReplyDeleteப்ளாக்ல கமெண்ட் பண்ணி ரொம்ப மாசம் ஆச்சு....அல்ஹம்துலில்லாஹ் !
பயனுள்ள பல தகவல்களை சேமித்து வையுங்கள்....! ஒரு கான்செப்டோட தொடருங்கள்....இந்த ப்ளாக்ல அந்த கான்செப்ட் பற்றிய முழு தகவல்களும் இருக்கும் படியா எழுதுங்க ! அது ரொம்ப ரீச் ஆகும் மக்களிடம் ! :)
நன்றியுடன்
நாகூர் மீரான்
அலைக்கும் சலாம் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்தஹு
ReplyDeleteபதிவுலகுக்கு முதல் பதிவுடன் என்ட்ரி...!
//Untitled//
ஆனா... பதிவுக்கு தலைப்பிட மறந்து விட்டீர்கள் சகோ..!
ம்ம்ம்...... பரவாயில்லை.பதிவு அருமையான கருத்து. வாழ்த்துகள் சகோ.யாஸ்மின்.
அஹ்லன் வ சஹ்லன் பிகும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்து ஹூ
ReplyDeleteநல்ல தொடக்கம்
மேலும் தொடர வாழ்த்துகள்!
வாழ்துக்கள் சகோ. எவர் கருத்தையும் கடன் வாங்காமல் எழுதுங்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் சிஸ்...
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம் சகோதரி.... நல்ல தொடக்கம்.... தொடருங்கள்..... தொடர்கிறேன்.....
ReplyDeleteவ அலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வ பரக்காத்தஹு.
ReplyDeleteபடிக்கும் அனைவருக்கும் உற்சாகமூட்டும் வரிகளுடன் தொடங்கிவிட்டீர்கள்.
இன்னும் அதிக அழகிய கருத்துகள் காண ஆவலுடன் இருக்கிறோம், இன்ஷா அல்லாஹ்.
மாஷா அல்லாஹ்.. அருமையான பதிவு... positive and negative thinking பற்றி ஒரு எளிய விளக்கம்... உங்கள் பணியை தொடருங்கள்...
ReplyDeleteMasha Allah,Arumayana Pathivu
ReplyDeleteWa alaykum as salaam wa rahmathullaahi wa barakathuhu dear sis.....,
ReplyDeleteAs I have always marvelled about your writing and sharing your thoughts very politely, this post also shows ur positive way of approaching things..... Very nice post.... Verily. I, will try my best to follow this personally...... Cos i am a critic of my own affairs and sarcastic.... ;)
May Allah bless your work by making a positive impact on the reader.... Aameen.